சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமபுரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும் தொடர்ந்து அந்த பகுதிகளில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலம் அளவீட்டுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடங்களில் ரகசிய அளவீடுகள் நடைபெற்று வருகின்றன. சிலை இடங்களில் மக்கள் உடலில் மண்ணெணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கிணற்றில் குதித்தும் போராட்டம் நடத்தினர். மேலும் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment