தன் சம்பளத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 18, 2018

தன் சம்பளத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொன்ன சிவகார்த்திகேயன்

தன் சம்பளத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொன்ன சிவகார்த்திகேயன்


தான் பாடல் எழுதியதற்கான சம்பளத்தை, நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

யோகிபாபு, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படமும் ரிலீஸாக இருக்கிறது.
‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த மூவருமே பாடல் எழுதியதற்காக சம்பளம் வாங்கவில்லை என்கிறார்கள்.
இதில், சிவகார்த்திகேயன் மட்டும் தனக்கு கொடுக்க நினைக்கும் சம்பளத்தை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார். காரணம், சிவகார்த்திகேயனுக்காக முதன்முதலில் பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார். சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான ‘மெரினா’வில், மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். அதனால் தான் தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படிச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடலில், நயன்தாரா மற்றும் யோகிபாபு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடல் வீடியோ ஏற்கெனவே ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது
.

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages